கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இதனால் ஆபத்து அதிகம் இல்லை என லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களிடையே கருச்சிதைவு, பிரசவத்தில் சிக்கல் அல்லது குழந்தை எடை குறைந்த பிறப்பு போன்ற ஆபத்துக்கள் அதிகம் இல்லை எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
4,004 கற்பவதிப் பெண்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பவதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டதன் காரணமாக எந்தவொரு குழந்தையும் இறக்கவில்லை. அத்துடன், தாய்மாரும் பெரிய சிக்கல்களைச் சந்திக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கோவிட் -19 தொற்று நோயால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என நிரூபிப்பதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமன்றி பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனாவால் பாதிப்பு அதிகம் இல்லை எனவும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் புதிய ஆய்வு ஆய்வு முடிவு கூறுகிறது. கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட நிலையில் பிரசவத்துக்குச் சென்ற பெண்களின் குழந்தைகளில் 10 வீதமான குழந்தைகளுக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் கர்ப்பவதிப் பெண்கள் மற்றும் ஏனைய பெண்களுக்கு இடையே கோவிட்19 தொற்று நோயால் இறக்கும் ஆபத்து சமமாகவே இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்றால் கர்ப்பவதிகள் இறக்கும் ஆபத்து அதிகம் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பெண்களிடையே முன்கூட்டடிய பிரசவம் அதிகமாக இருந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் தொற்று நோய் குறித்த அதிக முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் இதற்கான முடிவை அதிகமாக எடுத்துள்ளனர் எனத் தோன்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.